வாஷிங்டன்: பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான எப்டிஏ அனுமதி வழங்கி உள்ளது.

இந்த தடுப்பு மருந்தை அனுமதிக்குமாறு, டிரம்ப் அரசு நிர்வாகம் எப்டிஏ அமைப்பு கடுமையான அழுத்தத்தை கொடுத்துள்ளது. வெள்ளிக் கிழமைக்குள் கொரோனா மருந்தை அனுமதிக்க வேண்டும், இல்லை எனில் பதவி விலக வேண்டும் என எப்டிஏ தலைவர் ஸ்டீபன் ஹானிடம் கூறப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந் நிலையில், அமெரிக்காவில் பொது மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை, வரும் திங்கள் அல்லது செவ்வாய் முதல் தொடங்க, பைசர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்று உள்ளதாக சுகாதார மற்றும் மனிதாபிமான சேவைகள் துறை செயலாளர் அலெக்ஸ் அசார் தெரிவித்து இருந்தார்.

இந்த பைசர் கொரோனா தடுப்பு மருந்து, பிரிட்டன், கனடா, பஹ்ரைன், சவுதி அரேபியா நாடுகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.