மதுரை:
துரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வந்த சிறுவன் சாய் சரண். ஆறு வயது சிறுவனான சாய் சரண், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், ராஜாஜி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த இதே பகுதியை சேர்ந்த திருமலேஷ் என்ற சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த பத்து நாட்களாக மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் அடுத்தடுத்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதை அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மதுரை மாநகராட்சியும், சுகாதாரத் துறையுன் விரைந்து செயல்பட்டு, டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.