சென்னை:

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்க நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  1028 கூட்டுறவு சங்கங்களில்  பிப்ரவரி 3ந்தேதி தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள  505 தொடக்க பால் உற்பத்தி  சங்கங்கள் உள்பட 1028 சங்கங்களில் தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள  11ஆயிரத்து 368 நிர்வாக குழு உறுப்பினர் இடங்களில்,  3102 இடங்கள் பெண்களுக்கும், 2068 இடங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 27 ஆம் தேதி தொடங்குவதாகவும், பிப்ரவரி 3ந்தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 4ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பிப்ரவரி 8ந்தேதி தலைவர், துணை தலைவர் இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.