சென்னை:

ன்னிய செலாவணி முறைகெடு வழக்கில் 27-ம் தேதி டிடிவி தினகரன் ஆஜராக  எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே 20ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து 24ந்தேதி நடைபெறும் விசாரணையின்போது டிடிவி நேரில் ஆஜராக வேண்டும் என  நீதிபதி மலர்மதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் விசரணைக்காக டில்லி சென்றிருப்பதால், அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் கூறினார்.

அதைத்தொடர்ந்து வரும் 27ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து, அன்று டிடிவி தினகரன் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.