பிரேசில்:  பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரரான நெய்மர் ஃபிபோ 2018 கால்பந்து போட்டியில் பங்கேற்றால், மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என பெர்னாண்டினோ கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நெய்மருக்கு பாதத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வந்த நெய்மர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளார்.

அவரது வருகை  குறித்து பிரேசில் அணி வீரரான பெர்னாண்டினோ ‘நெய்மருக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் கடினமானதாக இருந்தாலும் விரைவில் குணமடையக்கூடியது, இதே போல் நானும் பாதிப்படைந்துள்ளேன், அவரது முயற்சிகள் மற்றும் நம்பிக்கை கால்பந்து போட்டியில் வெற்றிப்பெற உதவும்’ என குறிப்பிட்டுள்ளார்.