அகமதாபாத்:

இந்தியாவை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.


போர்பந்தரில் கஸ்தூரிபாய் காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண் துஷார் காந்தி, நாட்டைத் துண்டாடும் ஆர்எஸ்எஸ் கொள்கையை நாம் எதிர்த்து போராட வேண்டும்.
போராடாவிட்டால், நாம் காந்தியின் தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

ஜனநாயகத்தை காப்பதற்கு காந்தியவாதிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். இந்திராகாந்தி சர்வாதிகாரமாக நடந்து கொண்ட போது, நாம் அவரை வீட்டுக்கு அனுப்பினோம். இன்றும் கூட நமது வலிமை குறையவில்லை.

ஆனால் கொள்கை முடங்கிப் போனால் வலிமை குன்றிவிடும். நாம் நம்மை வலிமையுடையவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.