தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திரைப்படப் படப்பிடிப்புக்கான அனுமதி குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பெஃப்சி அமைப்புக்கு ரூ.4 கோடி அளவில் நிதியுதவி கிடைத்தது. இதன் மூலம் கிட்டத்தட்ட 25,000 தினக்கூலித் தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டது. இன்னும் தொடர்ந்து பல நட்சத்திரங்கள் அமைப்புக்கு உதவி செய்து வருவதாகவும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.