திரைப்பட இயக்குனர், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் வ.கௌதமன் கடந்த 2 வாரத்துக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் சிகிச்சைக்கு பிறகு அவர் குணம் அடைந்தார். சித்த வைத்தியம், அலோபதி சிகிச்சையில் குணம் அடைந்ததாக தெரிவித்திருக் கிறார். அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது உயிருக்கு நிகரான தாய்த் தமிழ் உறவுகளுக்கும்… என்மீது அளவற்ற பாசத்தை காட்டிய அனைத்து சொந்தங்களுக்கும் வணக்கம். கொரோனா தொற்றில் சிக்குண்ட செய்தியறிந்து பெரும் கவலையுடன் விசாரித்தவர்கள், பதட்டத்தை பகிர்ந்து கொண்டவர்கள், கதறி அழுது நலம் விசாரித்தவர்கள் என என் மீது பற்று கொண்டு விதவிதமான, மகத்தான மனித பாசங்களை நெகிழ நெகிழ நான் கண்ட காலம் இது.

எழுபது சதவிகிதம் சித்த மருத்துவத் தையும் முப்பது சதவிகித அலோபதி (ஆங்கில) மருத்துவத்தையும் எடுத்துக் கொண்டேன். முழுவதுமாக கொரோனா விலிருந்து நான் மீள காரணமாக அமைந் தது முதலில் சித்த மருத்துவம்தான். பாசத்திற்குரிய சித்த மருத்துவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைப் போலவே எனது அன்பிற்குரிய அலோபதி மருத்துவ சகோதரர்களும் என் மீது காட்டிய பாசத்தை இந்நேரத்தில் மறக்கவே முடியாது.
ஒருவேளை ஏதாவது நேர்ந்திருந்தால் இந்த இழப்பினை இப்படித்தான் பார்த்திருப்பார்கள் என்று ஒரு கணம் நினைத்துப்பார்த்து நெகிழும் படியான தருணங்களை உயிர்ப்புடன் இருக்கும் போதே அதனை காண நேர்ந்தது கூட ஒரு கொடுப்பினைதான் என்று கூட சொல்ல லாம். இதற்கெல்லாம் பிரதிபலனாக நான் அவர்களுக்காக, அவர்களின் உரிமை மீட்க அவர்களோடு வாழ்ந்துதான் காட்ட வேண் டுமே தவிர நன்றி சொல்லி அந்நியப்படுத் தவும் முடியாது, அந்நியமாகவும் முடியாது.
எங்களின் தமிழ்ப் பேரரசு கட்சி குடும்பத் தின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் எனது மரியாதைக்குரிய, தோழமைக் கட்சி தலைவர்களும், அவர்களின் தொண்டர் களும் மனம் நிறைந்து வாழ்த்தியது மறக்க முடியாது. கலை உலகை சேர்ந்த எனது மரியாதைக்குரிய ஆளுமைகள், படைப்பு லகை சேர்ந்த மாபெரும் ஆளுமைகள் தொடர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டே யிருந்தார்கள். மொழி கடந்து வாழும் பிற மாநிலத்தை சேர்ந்த எனது நெருங்கிய நண்பர்கள் பலர் வாழ்த்தியதும் நெகிழ்விற்குரியது.

இனி அடுத்தது என்ன? எம் இனம் காக்க   எம் மொழி காக்க 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எம்மினத்தின் உரிமை மீட்க எவர் அத்து மீறினாலும் சனநாயக யுத்தம் செய்ய மீண்டும் தயாராக வேண்டியதுதான்.
நாங்கள் மட்டுமல்ல நீங்களும் எங்களின் கைகளை இறுகப் பற்றுங்கள். எதிரிகளின் படை தகர்த்து இறுதிவரை உறுதியாக நின்று இனத்தின் உரிமை மீட்போம். வெல்வோம்.
இவ்வாறு கவுதமன் கூறி உள்ளார்.