த்யராஜ் நடித்த இங்கிலீஷ்காரன்‌’, மகாநடிகன்‌ உட்பட 20க்கும்‌ மேற்பட்ட படங்களை இயக்கி‌யதுடன் தயாரித்தும் இருக்கிறார் ஷக்தி சிதம்பரம்‌. தற்போது யோகிபாபு நடிக்கும்‌ ‘பேய்மாமா’ படத்தை இயக்கி வருகிறார்‌. ஷக்தி சிதம்பரம்‌ அளித்த பேட்டியில்‌ கூறியதாவது:


பொன்‌.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள்‌ வலைத்தளங் களில்‌ வெளியானது, அதே நேரம் நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக தகவல் வெளியானது எனக்கு பேரதிர்ச் சியை ஏற்படுத்தியது. இந்த தகவல்‌ முற்றிலும்‌ தவறானது. நான்‌ ‘பேய்மாமா’ பட ஷூட்டிங்கிற்காக கேரளாவில்‌ சில மாதங்கள்‌ தங்கியிருந்த காரணத்தால்‌ இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அதோடு *கொரோனா வைரஸ்‌ தொற்று’ தடைக்‌ காலம்‌ தொடர்ந்து நீடிக்கப்பட்டதாலும்‌ எனது மறுப்பு அறிக்கையை வெளியிட தாமதமானது.
நான்‌ புரட்சி தலைவர்‌ கொள்கைகளில்‌ ஈர்க்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா வின்‌ பொற்கரங்களால்‌ அடிப்படை உறுப் பினர்‌ அட்டை பெற்று, இன்றைக்கு தமிழக முதல்வர்‌ எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ ஆகியோரின்‌ வழிகாட்டுதலின் படி, ‘எனது உயிர்‌ மூச்சு இருக்கும்‌ வரை அனைத்திந் திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனாகவே தொடர்ந்து பணியாற்று வேன்‌. என் நிலைப்பாட்டை இதன்‌ மூலம்‌ உறுதியளிக்கிறேன்‌.
இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.