கேரளா மாநிலத்தின் கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலப் பகுதிகளில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை துறையினரின் பணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங், ஆகிய பணிகள் திங்கள் முதல் தொடங்கலாம் என்று கேரள அரசின் பண்பாடு மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்திருந்தார்.
இதற்காக ஸ்டூடியோக்கள் நேற்றே கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. பணியாற்றுபவர்கள் முகக்கவசம் அணிவது அவசியம். மற்றும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.