சென்னை
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இதையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை நடைபெற்று வருகின்றன.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“இந்த அண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் ஜனவரி மாதம் 5 ஆம் தேதி வரை வாக்காளர்கள் பெயர் திருத்தம், நீக்கம், முகவரி மாற்ற ஆகியவற்றை செய்யலாம்.
ஆன்லைன் மூலம் தகுந்த ஆவணங்களுடன் புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
வரும் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.