அபுதாபி: இன்று நடைபெறும் கடைசி பிளே ஆஃப் போட்டியில், டெல்லி – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்றையப் போட்டியில் வெல்லும் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, கோப்பைக்காக மும்பை அணியுடன் மோதும்.

அபுதாபி மைதானத்தில், இன்று இரவு 7.30 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.

அமீரக நாட்டில் நடைபெற்றுவரும் ஐபிஎல் 2020 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இறுதிப் போட்டியை சேர்த்து இன்னும் 2 ஆட்டங்களே மீதமுள்ளன.

இறுதிப் போட்டிக்கு நடப்புச் சாம்பியன் மும்பை அணி ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட நிலையில், அந்த மும்பையுடன் மோதுவது யார் என்பதை முடிவு செய்வதற்கே இன்றையப் போட்டி.

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா? என்று கணிக்க முடியாத பின்தங்கிய நிலையிலேயே இருந்தது ஐதராபாத் அணி. ஆனால், திடீரென எழுச்சிபெற்று, மூன்றாடமிடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃப் ஆட்டத்தில் பெங்களூரையும் வென்று, தற்போது டெல்லியை எதிர்கொள்கிறது.

மும்பையுடன் முதல் பிளே-ஆஃப் போட்டியில் மோதிய டெல்லி, மிகவும் மோசமாக செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.