‘தற்கொலை’ அசோக் குமார் –       ‘பைனான்சியர் ‘அன்பு செழியன்

சென்னை,

டத்தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர் முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அன்புச்செழியனின் நண்பர் கட்டுமான தொழில் செய்துவரும்  முத்துக்குமாரை காவல்துறை கைது செய்துள்ள நிலையில் தற்போது, அவரது மேலாளர் முருகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் நடிகர் சசிகுமாரின் உறவினரான  இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தன் தற்கொலைக்கு  காரணம் பைனான்சியர் அன்புச்செழியன்தான் என்று கடிதம்  எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், அசோக்குமாரின் மரணம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து போலீசாரும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவான அன்புசெழியனை தேடி வருகிறார்கள். நேற்று  அன்புசெழியனின்  நண்பர் முத்துக்குமாரை கைது செய்துள்ள நிலையில், அற்போது அன்புசெழியனின் மேலாளர் முருகனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.