சென்னை

திரைப்பட ஃபைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா என்பவர் கடததப் பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் முகுந்த் சந்த் போத்ரா ஒரு திரைப்பட ஃபைனான்சியர் ஆவார்.   இவர் அதிக வட்டி வசூலிப்பதாக எழுந்த புகாரில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.    அதன் பிறகு அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப் பட்டது.   அவரது இருமகன்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

அதன் பிறகு சிறையில் இருந்து வந்த முகுந்த் சந்த் போத்ரா தனது ஃபைனான்சியர் தொழிலை தொடர்ந்து நடத்தி வருகிறார்.   நேற்று போத்ரா தி நகர் காவல்துறை இணை ஆணயரிடம் ஒரு புகாரை அளித்தார்.  அவ தனது மகள் கரிஷ்மா போத்ரா என்னும் 30 வயதுப் பெண்ணை இரு தினங்களாக காணவில்லை எனவும் அவரை யாரோ கடத்தி உள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்தார்.

இந்த புகாரின் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி கரிஷ்மாவை தேடி வருகின்றனர்.    ஃபைனான்சியர் போத்ரா மிது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கரிஷ்மா வழக்கு தொடர்ந்துள்ள வேளையில் அவர் காணாமல் போனது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.   காவல் துறையினர் அவர் காதல் வசப்பட்டு வீட்டி விடு வெளியேறினாரா என்னும் கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.