புதுக்கோட்டை:

புதுக்கோட்டை- ஆலங்குடி அருகே நல்லாண்டான்கொல்லையில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு உள்ளது. இதன் அருகே கழிவு எண்ணெய் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வண்டிகளில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.