வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் வேதியியல் தொழிற்சாலையில் இன்று காலை பயங்கரமான  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தொழிற்சாலையின் பெரும்பகுதி கொளுந்துவிட்டு எரிகிறது.

 

தீயை அணைக்கும் முயற்சியில் 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. உள்ளே யாரேனும் சிக்கியிருக்கிறார்களா, என்பது தெரியவில்லை.  விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விரிவான தகவல் எதுவும் தெரியவில்லை.