திருப்பதி

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 20  நாட்களுக்கு முன்பு திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.     அப்போது தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர்.    நேற்று அதே இடத்தில் மீண்டும் தீ விபத்து எற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

நேற்று லட்டு தயாரிக்கும் இடத்தில் இரண்டாம் சமையலறையில் திடீரென தீ பற்றியது.   புகை போக்கிக் குழாயில் உள்ள நெய் திட்டுக்களில் தீபரவியதால் மிகவும் பரபரப்பு உண்டாகியது.   அந்த புகை போக்கிக் குழாய் வழியாக மற்ற அறைகளுக்கும் தீ பரவியது.    இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 45 நிமிடப் போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தமர்.

சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த நெய், உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.    சேதாரம் ஆன பொருட்களின் மதிப்பு இன்னும் சரியாக தெரியவில்லை.   தேவஸ்தான நிர்வாகம் இந்த விபத்தினால் யாருக்கும் காயமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.