டில்லி:

பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலக டில்லி கட்டிடம் தீப்பற்றியது. டில்லியில் பகதூர் ஷா ஜாபர் மார்க் பகுதியில் ஐந்து மாடி கட்டிடடத்தில் இந்த அலுவலகம் செயல்படுகிறது. இதன் முதல் மாடியில் இன்று மாலை எதிர்பாராத விதமாக தீ பற்றியது.  அதி வேகத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கும் தீ பரவியது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  31 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

இந்த விபத்தில் உயிர்ப்பலி ஏதும் ஏற்படவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை, விசாரணை நடந்துவருகிறது என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.