விசாகப்பட்டினம்:  
விசாகப்பட்டினம்  கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
விசாகப்பட்டினம், கொம்மடியிலுள்ள கொரோனாவின் தனிமைப்படுத்தப்பட்ட மையமான, ஒரு தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கணினியில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்தான் இந்த தீ விபத்து ஏற்பட காரணம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து மாற்றியுள்ளனர். மேலும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.