டெல்லி:

லைநகர் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது இது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன.

டெல்லியில் உள்ள மத்தியஅரசு அலுவலகமான சாஸ்திரி பவனில் மத்திய அரசின் பல  அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான துறையின் ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர். பல துறைகளுக்கு சொந்தாமான முக்கிய ஆவணங்களும் அங்குதான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,இன்று  வழக்கம் போல் அலவலகம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.