டெல்லி தலைநகர் டெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தின் இணை கட்டிட்த்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் தேதி, கொரோனா காரணமாக, இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், பாராளுமன்ற கட்டிடம் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  பாராளுமன்ற வளாக இணைப்பு கட்டத்தில் இன்று காலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  கட்டித்தின் 6வது மாடியில் தீப்பிடித்ததையடுத்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,   5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க வேண்டும் என்பதால், இரு அவைகளிலும் உறுப்பினர்களுக்கு இருக்கை அமைப்பதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.