தூத்துக்குடி:

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர் இதில் 8 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில்  ஸ்டெர்லைட் ஆலைநிர்வாக இயக்குநரின் உருவ பொம்மையை சென்னையில்  எரித்த இயக்குநர் கவுதமனை  போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரின்   தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்தனர். போரட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீசார் துப்பாக்கிச்சூடுநடத்தியது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் கவுதமன் இன்று செய்தியாளர்களை சந்தித்போது,   போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு கடும்  கண்டனம் தெரிவித்தார்.

மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய  இலங்கை அரசுக்கும் தமிழக அரசுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? என்று கேள்வி எழுப்பினார். சொந்த மக்களையே சுட்டுக் கொல்வதற்கு பெயர் அரசா? என்று கௌதமன் கேள்வி எழுப்பினார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் என்றும் போராட்டத்தில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக இயக்குநரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட் டத்தில் கவுதமன் ஈடுபட்டார்.  எடப்பாடி அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து கவுதமனை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.