சென்னை: வானின் அரிய நிகழ்வாக சனி, வியாழன் கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றின.

சூரியனை சுற்றுரம் ஒவ்வொரு கோளும் மற்ற கோளுடன் சில நேரங்களில் ஒரே நேர் கோட்டில் வரும். இந்த அரிய நிகழ்வு எப்போதாவது நடப்பதுண்டு. இந் நிலையில் இன்று சனி, வியாழன் இரண்டு கோள்கள் ஒரே நேர் கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வு நடைபெற்றது

இன்று மாலை 5 மணிக்கு துவங்கி மேற்கு திசையில் வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் நெருங்கின. 2 கோள்களும் ஒன்றையொன்று தொட்டு கொண்டு இருப்பது போன்று பிரகாசமாக காட்சியளித்து நாளை மற்றும் நாளை மறுதினம் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்லும்.

17ம் நூற்றாண்டுக்கு பின்னர் இந்த 2 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றுகின்றன, இது அரிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  இந்த அரிய நிகழ்வை காண பல்வேறு வானியல் கோளரங்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.