புதுடெல்லி: இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கு, முதல் டெஸ்ட்டில்(பகலிரவு) வெல்ல வேண்டிய கட்டாயம் என்று கணித்துள்ளார் முன்னாள் பவுலிங் நட்சத்திரம் அணில் கும்ளே.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிசம்பர் 17ம் தேதி, பகலிரவு போட்டியாக அடிலெய்டில் துவங்குகிறது.

கும்ளே கூறியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் மீண்டும் இடம்பெற்றுள்ளதானது, இந்திய அணிக்கு சிரமமான காரியமே. ஆனாலும், இந்திய அணியில் திறமைக்கு பஞ்சமில்லை.

முதல் டெஸ்ட் போட்டியுடன் கேப்டன் விராத் கோலி நாடு திரும்பும் நிலையில், முதல் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அதில், சிறப்பாக செயல்பட்டுவிட்டால் போதும், அதன்பிறகு எனது ஆதரவு இந்திய அணிக்கே.

ஒருவேளை, அதில் இந்திய அணி சொதப்பிவிட்டால், பின்னர், அதிலிருந்து மீண்டு, அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டு, டெஸ்ட் தொடரை வெல்வது கடினமாகிவிடும்” என்றுள்ளார் கும்ளே.