மதுரை:

துரை அருகே உள்ள தாத்னேரி அரசு பள்ளியில் ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்ட உள்ளது. இதுதான் தமிழகத்தில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள ரோபோ ஆய்வகம்.

மதுரை மாவட்டத்தில் தாத்தனேரி பகுதியில் உள்ள  திரு.வி.க. மாநகராட்சி பள்ளியில் இன்று ரோபோ ஆய்வகத் திறப்பு விழா நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் விழாவில் பங்கேற்று ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.

இந்த ஆய்வகத்தில் ரூ.13.5 லட்சம் செலவில் 10 விதமான ரோபோடிங் கருவிகள் உள்ளன. ஒரு கருவியை ஒரே நேரத்தில் 5 மாணவர்கள் கொண்ட குழு கையாளும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆய்வகத்தை திறந்துவைத்து பேசிய ஆணையர் அனிஷ் சேகர்,  “ஆய்வகத்தில் உள்ள ஒரு கருவியில் 400 முதல் 500 பாகங்கள் இருக்கும். அவற்றை பயன்படுத்தி மாணவர்கள் குறிப்பிட்ட தேவைக்கு உரிய ரோபோவை வடிவமைக்க வேண்டும். ரோபோக்களை இயக்குவதற்குத் அவசியமான கம்ப்யூட்டர் நிரல் மொழி (Coding language) மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும். பல்வேறு விதங்களில் பயன்படும் ரோபோக்களை செய்ய அவர்கள் கற்பிக்கப்படுவார்கள்.” எனக் கூறினார்.

மாணவர்களுக்கும் அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ரோபோ ஆய்வகத்தை பயன்படுத்துவது பற்றி சொல்லிக்கொடுக்க அமெரிக்க இந்திய கூட்டமைப்பைச் சேர்ந்த ரோபோ தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.