புதுடெல்லி:
ந்திய – இலங்கை மீனவர்கள்  இடையே பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது..
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி சென்று மீன் பிடிப்பதாக, இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்பட்டு, மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதை கண்டித்து தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த எல்லை தாண்டி மீன் பிடிப்பது, கைது  குறித்து,  இந்தியா,  இலங்கை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் அமைப்புகளுடன் பேச்சு நடத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பாடு செய்தது.
அதன்படி பேச்சு வார்த்தை தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடந்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. நேற்று  நான்காவது கட்ட பேச்சு வார்த்தை டெல்லியில் நடைபெற்றது.
முதலாவதாக 2014ம் ஆண்டு ஜனவரியில்  தமிழக – இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை சென்னை மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இரண்டாவதாக மே மாதம் 5 ந்தேதி 2014ம் ஆண்டு கொழும்பில் உள்ள ஹரிட்டாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தை  சென்னை தேனாம்பேட்டையில் மார்ச் 3ந்தேதி 2015 அன்று நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் , இலங்கை மீனவர்கள் , தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி  வலைகளை பயன்படுத்தி  இலங்கைக் கடல் பகுதியில் மீன் பிடிக்கக்கூடாது என்றனர்.
ஆனால் இலங்கை மீனவர்களின் இந்த கோரிக்கையை தமிழக மீனவர்கள் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள்  எங்கள் பகுதியில் வந்து மீன் பிடிப்பதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினர்.
இதற்கு தமிழக பிரதிநிதிகள், இந்திய இலங்கை கடல்பகுதி காலங்காலமாக 2 நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த பகுதியாகும். இதில்  நாங்கள் மீன்பிடிக்க  இலங்கை மீனவர்கள்  தடை செய்யக்கூடாது” என தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதன் காரணமாக எந்தவித சுமுக உடன்பாடும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் 4வது கட்டமாக டெல்லியில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்ததையில் இந்திய இலங்கை வெளியுறவு அதிகாரிகள், இலங்கை மீனவ பிரதிநிதிகள்,  இந்திய வெளியுறவு, தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள், தமிழகம், புதுச்ச ரியைச் சேர்ந்த 13 மீனவப் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.