மல்லிப்பட்டினம்அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமல் போன ராமேஸ்வரம் மீனவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரத்தில் இருந்து புதிய மீன் பிடி படகு வாங்குவதற்காக மீனவர்கள் 10 பேர் கடலூர் சென்றுள்ளனர். கடலூரில் இருந்து புதிய படகு வாங்கி விட்டு ராமேஸ்வரம் வந்து கொண்டிருந்த போது, மல்லிப்பட்டினம் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்10 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதில், செந்தில், காளீஸ்வரம் ஆகிய 2 பேர் மட்டும் உயிர் தப்பி கரைக்குவந்தனர்.

உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கூறியதையடுத்து, அதிகாரிகள் தேடும் பணியை துரிதப்படுத்தினர். ஆனால் மாயமான 8 பேர் இதுவரை மீட்கப்படவில்லை. தொடர்ந்து 2வது நாளாக தேடும்பணி நடைபெற்று வருகிறது.