பெங்களூரு:  கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த பயணிகளில் 2குழந்தைகள் உள்பட 5 பேர் தீயில் கருகி இறந்தனர்.

கர்நாடகா மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் என்று பகுதியில் சுமார் 32 பயணிகளுடன் தேசிய  நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று அதி காலை  திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதிகாலை நேரத்தில் பேருந்தில், பயணிகள் உறங்கிக்கொண்டிருந்ததால், தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது.  இதனால் பஸ்சினுள் இருந்த பயணிகள் அலயடித்துக்கொண்டு இறங்கினர்.
அதற்குள் , பஸ்சினுள் பயணம் சய்த இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உள்பட 5 பேர்  முழுவதும் தீயினால் சூழப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த   தீயணைப்பு துறையினர்,  விரைந்து வந்து பேருந்தில் பற்றியிருந்த தீயை அணைத்ததோடு காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து விபத்து நடந்த பகுதியை ஹிரியூர் எஸ்.பி. ராதிகா பார்வையிட்டார். இந்த சம்பவம் குறித்து ஹிரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
பேருந்தின்  இன்ஜின் கோளாறு காரணமாக பேருந்தில் தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் பெங்களூரு கலவரத்தின் காரணமாக, பேருந்து மீது யாரும் தீ வைத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.