கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது. இந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணி இன்று நடந்தது.

அப்போது விஷவாயு தாக்கியதில் ஒரு தொழிலாளி மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க தொட்டியின் உள்ளே இறங்கினர். விஷவாயு தாக்கியதில் இவர்களில் 5 இறந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று 5 உடல்களையும் மீட்டனர்.

மேலும், விஷவாயு தாக்கி மயங்கி விழுந்த 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.