டெல்லி: வரும் 6ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தவர்களால் உருமாறிய புதிய வகை கொரோனா பரவியதால், இரு நாடுகளுக்கும் இடையேயான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது:

இந்தியாவிலிருந்து ஜனவரி 6ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானங்கள் இயக்கப்படும். பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு வரும் 8ம் தேதி முதல் இயக்கப்படும்.

வாரம் 30 விமானங்கள் இயக்கப்படும், இதில் இரு நாடுகளில் தலா 15 விமானங்கள் இயக்கப்படும். இந்த கால அட்டவணை ஜனவரி 23ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.