ஹத்ராஸ்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

அம்மாநிலத்தின் ஹத்ராஸ் நகரில் யமுனா விரைவுசாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று காலை 7.15 மணியளவில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கடுமையான பனியின் காரணமாக சாலைகள் தெரியாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஹத்ராஸ் போலீஸ் எஸ்பி வினீத் ஜெய்ஸ்வால் கூறுகையில்,  இன்று காலை 7.15 மணியளவில் ஏழு அல்லது எட்டு வாகனங்கள் மோதியது. 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். காயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.