அஸ்ஸாம் மொழியில் நாட்டுபுற பாடல்களின் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா மஹாந்தா.

இவர் தனது கணவர் காஜென் மஹாந்தாவுடன் இணைந்து பல பாடல்களை பாடி ரசிகர்களைமகிழ்வித்துள்ளார் .

கடந்த 14-ஆம் தேதி, அர்ச்சனா மஹாந்தா மூளை பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .

இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் . இவர் மறைவுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் Sarbananda Sonowal தனது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனா மஹாந்தாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.