விழுப்புரம் வேளாம்புதூரில் நடந்த படுகொலை மற்றும் பலாத்காரம் குறித்து நடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருந்தார். அக்கொலை மற்றும் பலாத்காரத்தை செய்தது வன்னியர் என்பாக கஸ்தூரி குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கஸ்தூரி மற்றொரு ட்விட் செய்திருக்கிறார் அதில், அந்நியர் (anniyar) என்பதற்கு பதில் வன்னியர் (vanniyar) என்று எழுத்து மாறிவிட்டது. ஆகவே அந்த பதிவை நீக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “அந்தப் பதிவை யாரும் எடுத்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிர மாட்டீர்கள் என நம்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.