சென்னை

மிழகத்தில் இன்று இரண்டாம் நாளாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று மட்டும் 1875 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்தம் 38716 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று உயிர் இழந்தோர் எண்ணிக்கை 23 அதிகரித்து மொத்தம் 349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் ஆறுதல் அளிக்கும்படி கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் 1000க்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர்.

இன்று 1372 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 20,705 ஆகி உள்ளது.