ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 4 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் கொட்டம் அதிகரித்து வருகிறது. போர் ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை நடத்தி வருகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்று மாலை நவ்ஷேரா செக்டாரில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதலை நடத்தத் தொடங்கியது. அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த வேளையில், ஹந்த்வாராவில் பயங்கரவாதிகள்  இந்திய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கி சண்டையில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் காஷ்மீர் மாநில காவல்துறையினர் 2 பேர் வீர மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.