ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கொடைக்கானல் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட திரைப்பலங்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனால் வனத்துறையினர் விசாரணை நடத்திய பின் கடந்த 17-ம் தேதி ஏரியில் நடிகர்கள் சூரி மற்றும் விமல் ஆகியோர் அங்கு மீன்பிடித்துள்ளது உறுதி செய்து விமல் மற்றும் சூரி உள்ளிட்டோருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.