இந்தக் கொரோனா ஊரடங்கில் சாத்தான்குளத்தில் ஜெயராம் மற்றும் பென்னிக்ஸ் மரணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையும் பெரும் சர்ச்சையாக உருவானது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில்


“ஜெயலலிதாவோ ஜெயராஜோ அல்லது ஜெயப்ரியாவோ, அது அடுத்த பரபரப்பான மரணம்/ கொலை/ பாலியல் வன்கொடுமை குறித்த செய்தி வரும்வரைதான். அதன் பிறகு நீதி கேட்கும் ஹேஷ்டேகுகள் மாறிவிடும். ஆனால் மாற வேண்டியது எதுவும் மாறாது. இவையெல்லாம் சோர்வை ஏற்படுத்திவிட்டன. சோகம் மட்டுமே எஞ்சுகிறது. மறதி ஒரு தேசிய வியாதி”.
இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.