மிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகை ஜமீலா மாலிக் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

புனேவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதல் பெண் மாணவவர் ஜமீலா மாலிக். அதனை தொடர்ந்து அவர் மலையாளத்தில் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆத்யாதே கதா என்ற படத்தின் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்தார்.

தமிழ் சினிமாவில் வெள்ளிரதம்,  அழகிய ராகம்,  நதியை தேடி வந்த காதல் லட்சுமி, என  பல படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். ஏராளமான மலையாள திரைப்படங் களில் நடித்துள்ளதுடன், தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும்  நடித்துள்ளார்

வயது முதிர்வு காரணமாக நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த ஜமீலா கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி ஜமீலா உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துஉள்ளனர்.

அவரது மறைவுக்கு திரையுலகினர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.