அமராவதி:

ந்திர மாநில சட்டமன்ற சபாநாயகரும், மூத்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான கே.சிவ பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தெலுங்கு தேசம் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவின் முன்னாள் சபாநாயகரும், மூத்த டி.டி.பி தலைவருமான கே.சிவபிரசாத் ராவ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு,  மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவர்கள் அவரை சோதித்து, அவர் ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தனர்.

தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்தவரான முன்னாள் சபாநாயகர் கே.சிவபிரசாத் ராவ், மற்றும் அவர் மகன் மீது,  கடந்த 2016 ம் ஆண்டில் ஐதராபாத்தில் இருந்து அமராவதிக்கு சட்டசபை தளபாடங்கள் மற்றும் உபகரணங்களை மாற்றும்போது, ​​அதில் சிலவற்றை சாட்டேனபள்ளியில் உள்ள அவரது அலுவலக- இல்லத்திற்கு எடுத்துச் சென்றதாக புகார் கூறப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.