அமேதி: 64 வயதான ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் ஒருவர், உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த சனிக்கிழமை இரவு கோடியான் கா பூர்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. இறந்துபோன முன்னாள் கேப்டனின் பெயர் அமானுல்லா.

சம்பவத்தன்று இரவு, அமானுல்லாவும் அவரின் மனைவியும் மட்டுமே வீட்டிலிருந்தபோது, அங்கே வந்த ஒரு கும்பல், கட்டைகளால் சராமரியாக தாக்கியது என்று தெரிவித்துளளார் அவர்களின் மகன்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அமானுல்லா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். வீட்டில் வேறு யாரும் இல்லாத காரணத்தால், உதவிக்கு வரமுடியவில்லை என்றும் அவரின் மகன் தெரிவித்துள்ளார். அமானுல்லாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.