மும்பை:   மகாராஷ்டிர  மாநில முன்னாள் முதல்வருமான சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் காலமானார். அவருக்கு வயது  89.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான  சிவாஜிராவ் பாட்டீல் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியின்போது,   1985 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 1986 மார்ச் வரை முதல்வராக இருந்தவர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர்.

ஏற்கனவே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் சமீபத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மீண்டும் அவருக்க சிறுநீரக கோளாறு தீவிரமடைந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது  குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது இறுதி சடங்குகள் மகாராஷ்டிராவின் லாதூர் மாவட்டத்தில் நிலங்கா நகரில் இன்று மாலை நடைபெறும் தெரிவித்துள்ளனர்.

நிலங்கேகரின் மகன் சம்பாஜி பாட்டீல், தற்போது  பாஜக எம்.எல்.ஏ  ஆக உள்ளார். ஏற்கனவே  பாஜக ஆட்சியின்போத, தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான அரசாங்கத்தில் தொழிலாளர்  நலத்துறை அமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.