நாகை: வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் சமீபத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவர்.

வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் திருச்சியில் உள்ள  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் சிகிச்சை பலனின்று இன்று அவர் காலமானார்.

மா.மீனாட்சி சுந்தரம்,   மூன்றுமுறை வேதாரண்யம் எம்எல்ஏவாக பதவிவகித்தவர். மேலும் நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

சென்னையில் கடந்த 15ஆம் தேதி நடந்த திமுக முப்பெரும் விழாவில் மறைந்த மீனாட்சி சுந்தரத்திற்கு  பெரியார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.