புதுச்சேரி: புதுச்சேரி  மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் சுப்பிரமணியன் (வயது70)  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுச்சேரியில், நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு புதிதாக தொற்று உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  15,157 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில்,  4,936 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை  9,968 பேர் பாதிப்பில் இருந்து குண மடைந்து உள்ளனர். மேலும் 253 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் சுப்பிர மணியன்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனாவுக்கு பலியான  சுப்ரமணியன் மூன்று முறை உருளையன்பேட்டை, முதலியார் பேட்டை திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.