பனாஜி: கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார். அவருக்கு வயது 77.

பீகாரை சேர்ந்த அவர் 1942ம் ஆண்டு பிறந்தார். கணவர் ராம் கிர்பால் சிங் மத்திய வெளியுறவு அமைச்சராக இருந்தவர். 1981ம் ஆண்டு பாஜகவில் தம்மை இணைத்து கொண்ட சின்ஹா, கட்சியின் துணைத் தலைவராகவும், பாஜக பெண்கள் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

பின்னர் கோவா ஆளுநராக 2014 முதல் 2019 வரை பணியாற்றினார். தூய்மை இந்தியா திட்ட தூதராகவும் 2014ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெபி நட்டா, கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் உள்ளிட்ட பலர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.