சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.  1991ம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை முன்னாள் நீதிபதி மோகன் காலமானார்.