சிவகங்கை: தமிழ் இனத்திற்கு பகையான கட்சியாக பாஜக உள்ளது என்று முன்னாள்  அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பாஜகவுக்கு அதிமுக பல்லக்கு தூக்கி வரும் கட்சியாக உள்ளது. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்கள் அல்ல என்ற கொள்கையை கொண்டவர்கள் பாஜகவினர்.

திமுக எம்பி கனிமொழியிடம் இந்தி தெரியவில்லை என்றால் நீ இந்தியர் இல்லையா என விமான நிலைய காவலர் கேட்டுள்ளார். பங்காளி சண்டையில் நானா, நீயா பெரியவர் யார் என தமிழக தேர்தலில் 3வது ஒரு கட்சி நிற்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கும் 3வதாக களத்தில் நிற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழகத்தில் மாற்று ஆட்சி அமைக்கத் தகுதியான கட்சி திமுக மட்டுமே  என்றார்.