சென்னை: தமிழகத்தைச்சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற  நீதிபதி  ஏ.ஆர்.லட்சுமணன் காலமானார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர். இவருக்கு வயது 78. வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு ஏ.ஆர்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்ற இரு மகன்களும், உமையாள், சொர்ணவள்ளி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இவரது மகன் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனியர் வக்கீலாகவும், சென்னை பார் அசோசியேசன் தலைவராகவும் இருக்கிறார்.

ஏ.ஆர்.லட்சுமணின்,   இறுதி சடங்குகள் அவரது சொந்த ஊரான தேவக்கோட்டையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து  அதிரடி தீர்ப்பு வழங்கியவர் என்பதும்,  சட்ட ஆணையத்தின் தலைவராகவும் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

http://drjusticear.com/dr_abdulkalam.html