ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடந்த சாலை விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்முவில் இருந்து 5 ராணுவ வீரர்கள் ஒரு காரில் காஷ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீநகர் – ஜம்மு நெடுஞ்சாலையில் ஷட்டானி நல்லா அருகே பனிகால் என்ற இடத்தில் சென்றபோது ராணுவ வீரர்களின் கார் விபத்துக்குள்ளானது.

இதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மேலும் ஒரு வீரர் பனிஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் பவன் குமார், விஜய்குமார், ஓம்பிரகாஷ் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர் ஜோஹிந்தர் பால் என தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் தெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பணியில் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.