சென்னை,

மிழகத்தில் பிரான்ஸ் தூதரகம் சென்னையில் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று புதுச்சேரி பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை  பிரான்ஸ் தூதரகம் கிடையாது. பிரான்ஸ் விசா தேவைப்படுபவர்கள் புதுச்சேரியில் உள்ள கிளையையே நாடி வந்தனர்.  புதுச்சேரி தூதரக கிளையின்கீழ் தமிழகம், புதுவை, அந்தமான், நிகோபார், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வருகின்றன.

இந்நிலையில் சென்னையிலும் பிரான்ஸ் தூதரக கிளை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் மாதம் சென்னையில் திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்  என பிரான்ஸ் துணை தூதர் கேத்ரீன் ஸ்வாட் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டின் புதிய துணை தூதராக நியமிக்கப்பட்ட கேத்ரீன் ஸ்வாட் கடந்த ஜூலை 31ம் தேதி பதவியேற்றார்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் நாட்டு துணை தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்திய-பிரான்ஸ் நட்புறவை பலப்படுத்தும் வகையில் வரும் ஜனவரி மாதம் புதுவையில் படகுப் போட்டி நடத்தப்பட உள்ளதாகவும், வரும் அக்டோபரில் சென்னையில் ஒரு தூதரக கிளை திறக்கப்படும் என்றும் கூறினார்.