பாரிஸ்: பிரான்சில் 24 மணி நேரத்தில் மேலும் 23,924 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, 230 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறி இருப்பதாவது: புதிதாக 23,924 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,035,181-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 230 பேர் பலியாக மொத்த உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 72,877 ஆக அதிகரித்து உள்ளது.

மீண்டவா்களின் எண்ணிக்கை 2,16,725 ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 75 சதவீதமாகும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வர, தற்போதைய நிலவரப்படி, ​​25,900  பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.

1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜனவரிக்குள் 1.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.